August 2026

 



ஆகஸ்ட்-12 ஜூன் 26 அன்று மதேபுரா பணித்தளத்தில் நடைபெற்ற ஒரு நாள் கன்வென்ஷன் கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூட்டத்தில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினர். இந்தக் கூட்டத்தில் 130 பேர் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்றுச் சென்றனர். இப்பணித்தளத்தில் தொடர்ச்சியாக  நடைபெற்றுவரும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும் மற்றும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-13 தர்பங்கா பணித்தளத்தின் தீமோத்தேயு வேதாகம கல்லூரியின் பத்தாவது அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நிகழ்ச்சி ஜூன் 28 ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்நிலையில்சகோதரர்.ஷாஜன் தேவ செய்தி அளித்து மாணவர்களை  அர்ப்பணித்து அவர்களுக்காக ஜெபித்தார். பயிற்சியினை நிறைவு செய்த சகோதரர்கள் பணித்தளங்களில் தொடரவிருக்கும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-14 பாரு பணித்தளத்தில் ஜூலை 12 அன்று நடைபெற்ற ஒருநாள் கன்வென்ஷன் கூட்டத்தில் 450 விசுவாசிகள் பங்கேற்றனர்;. சகோதரர் ஷாஜன் மற்றும் சகோதரர் டேனியல் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார்கள். பாரு பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் நற்செய்தி ஊழியங்களுக்காகவும், பணித்தள விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-15 பாட்னா ஜெம்ஸ் செயல் மையத்தில், ஜூலை 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற வாலிபர் கூடுகையில், பாஸ்டர். ஜான் ஜெயக்குமார் (நாகர்கோவில்) தேவ செய்தியுடன் வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் அளித்து வாலிபர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தினார். இக்கூடுகையில், 110  வாலிப சகோதர சகோதரிகள் பங்கு பெற்றனர். கடைசி நாளில் ஏறெடுக்கப்பட்ட ஜெப வேளையின்போது, அநேகர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர். மேலும், அநேகர் ஊழியத்திற்கென்றும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். பணித்தள வாலிபர் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.

ஆகஸ்ட்-16 மிகுவல் பணித்தளத்தில் ஜூலை 18 அன்று நடைபெற்ற ஊழியர் இல்ல அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்; சகோதரர் ஆனந்தன் ஜெபத்துடன் இல்லத்தை அர்ப்பணித்து திறந்துவைத்தார். இப்பணித்தளத்தில் புதிய ஆத்துமாக்களை கர்த்தர் மந்தையில் சேர்க்கவும், பணித்தளங்களில் சுவிசேஷத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம்.

 


July 2026



ஜூலை 11 தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர் எழுப்புதல் கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர். சென்னை ஓசன்னா ஊழியத்தைச் சேர்ந்த போதகர் தாமஸ் சாம் கிருபாகரன் மற்றும் போதகரின் துணைவியார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, வாலிபர்களுக்காக ஜெபித்தனர். அநேக வாலிபர்கள் கிறிஸ்துவுக்காக வாழவும், ஊழியம் செய்யவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். இக்கூட்டங்களில் பங்கேற்ற வாலிபரின் வாழ்க்கையில் கிறிஸ்து வெளிப்படவும், சமுதாயத்தில் இவர்கள் சாட்சிகளாக வாழவும் ஜெபிப்போம்.

ஜூலை 12  தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், 'Never give up" என்ற கருப்பொருளின் கீழ் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியம் நடைபெற்றது. வேதாகமப் பாடங்கள், பாடல்கள், கதைகள் மற்றும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுடன் கிறிஸ்துவின் அன்பு சிறுவர் சிறுமியரிடையே ஆழமாக அறிவிக்கப்பட்டது. சுமார் 800 சிறுவர் சிறுமியர் இவ்வூழியத்தின் மூலம் ஆசீர்வாதம் பெற்றனர். இறுதிநாள் விழாவின்போது மாணவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். பணித்தளங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்கள் மூலமாக அநேக சிறுவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பு அறிவிக்கப்படவும், சிறுவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம். 

ஜூலை 13  ஜுன் 2 அன்று பக்தியார்பூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 68 பேர் பங்கேற்றனர். தேவ செய்தியுடன், குடும்பங்களில் பெண்களின் பங்கு குறித்தும், உறவினர்களை கிறிஸ்துவுக்குள் வழிநடத்துவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு, கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் ஆலயம் கட்டப்படுவதற்கான நிலங்கள் விரைவில் வாங்கப்படவும், பணித்தள விசுவாசிகளின் வாழ்க்கைத் தரம் உயரவும் ஜெபிப்போம். 

ஜூலை 14 ஜுன் 19 அன்று தெபோரா வேதாகமக் கல்லூரியின் சான்றளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ. சுரேஷ் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.

ஜூலை 15 கியோட்டி ரன்வே பணித்தளத்தில் நடைபெற்றுவரும் கட்டிடப் பணிகளுக்காகவும், தற்போது நடைபெற்றுவரும் கான்கிரீட் பணிகள் எவ்விதத் தடையுமின்றி விரைவாக நடைபெறவும் ஜெபிப்போம். மேலும், இப்பகுதியில் செயல்பட்டுவரும் இருளின் சக்திகள் மாறவும், சுவிசேஷத்திற்கு எதிரான அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு, தேவனுடைய ராஜ்யம் வல்லமையுடன் கட்டியெழுப்பப்படவும், அநேகர் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறவும் ஜெபிப்போம். 


June 2026

 



ஜூன் 11  ஆத்தும ஆதாயப் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு, 'each one catch one' என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆத்தும ஆதாயகப் பயிற்சி முகாமில், பர்சா, ராம்பூர், குஷ்ருபூர் ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 168 பேர் பங்கேற்றனர். இம்முகாமில், சகோ. சுனில், ஆத்ம ஆதாயப் பணிக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் அவசியத்தையும் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், ஆத்தும அறுவடையாளர்கள் பெருகவும் ஜெபிப்போம்.


ஜூன் 12 மே 1 அன்று தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமை கர்த்தர் ஆசீர்வதித்தார். இம்முகாமில், 450 பேர் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர். மருத்துவச் சிகிச்சையுடன், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் மூலம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தையும் கூடவே அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார்.  

ஜூன் 13 தர்பங்கா பணித்தளத்தில் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதற்காக ஆண்டவருக்கு நன்றி கூறுகின்றோம். மேற்கூரைப் பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் பிற கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட காலத்தில் விரைந்து முடிக்கப்படவும், தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

ஜூன் 14 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார். கோரியா பணித்தளத்தில் மே 7, 8, 9 ஆகிய தினங்கள் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, 400 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். தொடர்ந்து  பணித்தளங்களில் நடக்கவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவும் ஜெபிப்போம்.


ஜூன் 15 மே 9 அன்று, ஹத்தியாகட் பணித்தளத்தில், திருமண வயதில் உள்ள வாலிபப் பெண்களுக்கான ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரி சஜிலா நார்டன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வசனத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு, தேவ செய்தியையும் அளித்தார்கள். இப்பயிற்சியில் 52 பேர் பங்கு பெற்றனர். பணித்தளங்களில் திருமண வயதை எட்டியிருக்கும் சகோதர சகோதரிகளின் எதிர்காலத்திற்காக ஜெபிப்போம்.

May 2026

 



மே  11 தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில், 180 ஞாயிறுப் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கான வேதாகமத் தேர்வுகளும் நடத்தப்பட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்படியாக பரிசுகளும் வழங்கப்பட்டன. பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அநேக கிராமங்களில் ஞாயிறுப் பள்ளிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம். 

மே  12 ஏப்ரல் 11 அன்று தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்ற எட்டு மணி நேர ஊழியர் குடும்ப உபவாசக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்.  சகோதரி எலிசபெத் குழுவினர் (சென்னை) ஜெபக்குறிப்புகளைக் கூறி ஊழியர்களை ஜெபத்தில் வழிநடத்த, சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும்  மற்றும் காப்பகங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மே 13 சமஸ்திபூர் பணித்தளத்தில் ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 55 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஸ்டீபன் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், குடும்பத்தினரை கிறிஸ்துவண்டை நடத்தும் கருவிகளாக மாறவும் ஜெபிப்போம். 

மே  14 பர்சா பணித்தளத்தில் ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற ஒருநாள் வேதாகமப் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சி வகுப்புகளில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சுனில் ஆகியோர் வேதாகமத்திலிருந்து பல்வேறு சத்தியங்களைக் கற்றுக்கொடுத்தனர்; இப்பயிற்சி வகுப்பில் 120 பேர் பங்கேற்றனர். விசுவாசிகள் வேத அறிவில் வளரவும், வசனத்திற்கு தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கவும், விசுவாசிகளின் உறவினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

மே 15 கியோட்டி ரன்வே மற்றும் தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் கான்கிரீட் பணிகளுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம். 

April 2026

 


ஏப்ரல் 11 'கஸ்ரைனி பணித்தளத்தில் மார்ச் 11 அன்று நடைபெற்ற விசுவாசிகளுக்கான சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார்; பணித்தள மக்கள் 80 பேர் இக்கூடுகையில் பங்கேற்றனர்; சகோ. ஆனந்தன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 12 'ஹாஜ்பூர் பணித்தளத்தில் மார்ச் 20 அன்று ஒருநாள் கன்வென்ஷன் கூடம் நடைபெற்றது; 150 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சாஜன் ஆகியோர் தேவ செய்தியளித்து, ஜனங்களுக்காக ஜெபித்தனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் மற்றும் வாலிபர் ஊழியங்களுக்காகவும், பணித்தள ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 13 'தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையம் மற்றும் கியோட்டி ரன்வே பணித்தள ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி நல்ல முறையில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் குறிக்கப்பட்ட நாட்களுக்குள் நிறைவேறவும், ஜனங்கள் விரைவில் விடுதலையோடு தேவனை ஆராதிக்கவும், இப்பணித்தளங்களில் ஆத்தும அறுவடை பெருகவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 14 'அட்மல்கோலா பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் தடையின்றி தொடர்ந்து நடைபெறவும்; தேவைகள் சந்திக்கப்படவும், அட்மல்கோலா பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் ஆத்தும ஆதாயப் பணிகள் மற்றும் நற்செய்திக் கூட்டங்கள் மூலமாக ஆத்துமாக்கள் கர்த்தரின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம். 

ஏப்ரல் 15 'கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் நடைபெற்றுவரும் கல்விப் பணிகள் மூலமாக 86 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர். நிர்மலி பணித்தளத்தின் கஞ்சர் மக்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவிக்கவும், கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக கிறிஸ்துவின் நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சிறுவர் கல்விப் பணிகளின் மூலமாக 75 பிள்ளைகள் பயனடைந்துவருகின்றனர்; இச்சிறுவர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், இவர்களது குடும்பத்தினர் இயேசுவை கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.

March 2026

 


மார்ச் 11 : புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் வாலிபர் கூடுகையில் 150 வாலிப சகோதர சகோதரிகள் பங்கேற்றனர்; சகோ. ஜான் ஜெயக்குமார் வாலிபருக்கேற்ற செய்தியை பகிர்ந்துகொண்டு, வாலிபரை ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது பலர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். இம்முகாமில் கலந்துகொண்ட வாலிபர் கிறிஸ்துவின் சாட்சிகளாக வாழவும், தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை பிரதிபலிக்கவும், உடன்வாலிபரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்தவும் ஜெபிப்போம். 

மார்ச் 12 : பர்சா மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் 180 பெண்கள் பங்குபெற்றனர். சகோதரி சஜிலா நார்டன் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் பெண்கள் ஊழியங்களுக்காகவும், பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் மாற்றங்கள் உருவாகவும் ஜெபிப்போம். 

மார்ச் 13 : பிப்ரவரி 21 அன்று மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற வாலிபர்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 110 வாலிபர்கள் பங்கேற்றனர். சகோ. வென்னிலவன் மற்றும் ஜெம்ஸ் வாலிபர் ஊழியக் குழுவினர், பாடல்கள், குறுநாடகங்கள் மற்றும் தேவசெய்தியின் மூலமாக வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி, ஆவிக்குரிய வாழ்க்கையில் அவர்களை உற்சாகப்படுத்தினர். 

மார்ச் 14 : தர்பங்கா ஜெம்ஸ் செயல்மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்டுள்ள நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் செய்யப்படவிருக்கும் நற்செய்திப் பணிகளுக்காகவும் மற்றும் பின்தொடர் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

மார்ச் 15 : பணித்தளங்களில் நடைபெற்ற சிறுவர் ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியரை கிறிஸ்துவின் அன்பின் வழிநடத்த கர்த்தர் உதவிசெய்தார். தொடர்ந்து சிறுவர் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்படவும், பணித்தளங்களைச் சுற்றியுள்ள கிராமங்கள் நற்செய்திக்கு செவிகொடுக்கவும், வீட்டு சபைகளின் எண்ணிக்கை பெருகவும் ஜெபிப்போம்.  


Feb 2026

 


பிப்ரவரி 10 பகுவாரி கிராமத்தில் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்; தொடர்ந்து இக்கிராமத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கூடிவந்தவர்களுக்காக ஜெபித்தார். இக்கிராமத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும், ஊழியத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 11 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூடுகையில், 750 மாணவர் மற்றும் மாணவியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 950 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 12 தர்பங்கா மாவட்டத்தில் முடிடப்பட்டிருந்த சபையினை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஜனவரி 15 அன்று மீண்டும் திறக்கவும், ஆராதனை நடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார். இம்மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தளங்களில் ஆராதனை எவ்விதத் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 13 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், ஜனவரி 21 அன்று சியோகர் பணித்தளத்தில் புதிதாக Children Club தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணியின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 14 பெனிப்பூர் பணித்தளத்தில் திடீரென வந்த சமூக விரோதிகள், ஜெம்ஸ் ஊழியரை அடித்து, ஆலயத்தின் கதவு மற்றும் முன் வாசலை பூட்டி, தங்கள் மதத்தின் கொடியையும் ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து காணப்பட்டுவரும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.    

Jan 2026

 



ஜனவரி -  13 
ஷாவக்பூர் பணித்தளத்தில் ஒருநாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது; விசுவாசிகள் விசுவாசத்தில் வளரவும், தங்கள் ஜெப வாழ்க்கையில் முன்னேறவும் மற்றும் வசனத்தை அறிந்துகொள்ளவும் இக்கூடுகை வழிவகுத்தது. சென்னையைச் சேர்ந்த சகோ. ரூபன் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், ஆத்தும ஆதாயகர்களாக மாறி கர்த்தருடைய மந்தையில் ஆத்துமாக்களை சேர்க்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  14 மைதிலி  1 கோட்டத்தின் தர்பங்கா மற்றும் சிசோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஜெம்ஸ் பெண்கள் முன்னேற்ற ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு தேவ செய்தியுடன், பெண்களின் வாழ்க்கைக்கான சிறப்பு ஆலோசனைகளையும் வேத வசனங்களின் அடிப்படையில் அளித்து அவர்களுக்காக ஜெபித்தனர். கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மத்தியிலும் தேவனை பிறருக்கு அறிவிக்கவும், தங்கள் குடும்பங்களில் எரியும் தீபங்களாக விளங்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 15 டிசம்பர் 12, 2025 அன்று ராம்பூர் மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 90 பேர் கலந்துகொண்டனர்; சகோதரி சஜிலா நார்டன் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். குளிர் நாட்களில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், பணித்தளங்களில் காணப்பட்டுவரும் ஊழியத்திற்கு எதிராக விரோதங்கள் மாறவும், எதிர்ப்போர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  16 நிர்மாலி மற்றும் மணிகாச்சி ஆகிய பணித்தளங்களில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு தின நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் குறுநாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை எடுத்துக்கூறி, சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளங்களில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஆத்தும அறுவடை இப்பகுதியில் பெருகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  17 கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் டிசம்பர் 21 அன்று ஞாயிறு பள்ளி பிள்ளைகள் மூலம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் வாயிலாக, பங்கேற்ற பணித்தள மக்கள் பலருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில், 260 ஞாயிறு பள்ளி சிறுவர் சிறுமியரும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்கள் மூலமாக சமுதாயமும் குடும்பங்களும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

December 2025

   வடக்கு மண்டலம்


டிசம்பர் 07 பசோபட்டி பணித்தளத்தில் ஒருநாள் பெண்கள் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமுதாயத்திலும் மற்றும் குடும்பத்திலும் கிறிஸ்துவின் அன்பினை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக பெண்கள் செயல்பட நடைமுறை ஆலோசனைகளுடன் தேவசெய்தியையும் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார் சகோதரி சஜிலா நார்டன். இக்கூட்டத்தில் 90 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

டிசம்பர் 08 மாணவர் ஞாயிறை முன்னிட்டு, நவம்பர் 9 அன்று, வடக்கு மண்டலத்தின் அனைத்து பணித்தள ஆலயங்களிலும், ஞாயிறுப் பள்ளி மாணவர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனை தேவ நாமத்தை மகிமைப்படுத்தியதுடன், சபை மக்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் மற்றும் ஞாயிறுப் பள்ளி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.  

டிசம்பர் 09 தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளை நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 10 மதுபனி பணித்தளத்தில், நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் மற்றும் ராஜ்நகர் பணித்தளத்தில் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில்  ஜெம்ஸ்-ன் Advance WET Team ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு, தேவ செய்தியளித்து பங்கேற்றோருக்காக ஜெபித்தனர். இக்கூடுகைகளில், 167 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தள பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் வரும் நாட்களில் கர்த்தர் மாற்றங்களைக் கொண்டுவர ஜெபிப்போம். 

டிசம்பர் 11 பாட்னாவில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் தையற்பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் சகோதரிகளுக்காகவும், பீஹாரில் அமைந்துள்ள புதிய அரசிற்காகவும் மற்றும் பாட்னாவில் நடைபெற்றுவரும் வாலிபர் ஊழியங்கள் மூலமாக அநேக வாலிபர்கள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்படவும் ஜெபிப்போம்.  


November 2025

                                                   வடக்கு மண்டலம்



நவம்பர் 11 மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் மதுபனி மற்றும் சுற்றியுள்ள பணித்தளங்களைச் சேர்ந்த சபை விசுவாசிகள் சுமார் 450 பேர் உற்சாகமாகப் பங்கெடுத்தனர். இக்கூட்டங்களில், சகோ. எமர்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களை ஜெபத்தில் வழிநடத்தினார். பணித்தள விசுவாசிகளின் சாட்சியுள்ள வாழ்க்கைக்காகவும், விசுவாசிகளின் உறவினர்கள் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 12 பர்சா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல்மையத்தில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமில் 75 பேர் பங்கேற்றனர். பணித்தளங்களில் சிறுவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும். ஞாயிறுப் பள்ளி வாயிலாக அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்தவும் போதிய ஆலோசனைகளுடன், தேவ செய்தியின் மூலமாக அவர்களது உள்ளத்தில் சிறுவர்களைக் குறித்த பாரத்தையும் விதைக்க கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் கல்வி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 13 கோரியா பணித்தளத்தில் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 60 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் வாலிபர்களது வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனையுடன், தேவ செய்தியையும் அளித்து, கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றி நிற்கவும், அவருக்காக சாட்சிகளாக வாலிபத்தில் வாழவும் வாலிபர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது, வாலிபர்களில் பலர் தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் காணப்படும் வாலிபர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், வாலிபர்கள் பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும் ஜெபிப்போம். 

நவம்பர் 14 தர்பங்கா பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், பணித்தள விசுவாசிகள் 350 பேர் பங்கேற்றனர்; சகோ. ராகேஷ் குமார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். 

நவம்பர் 15 பணித்தளங்களில் ஊழியத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும், ஆலயமில்லாத இடங்களில் விரைவில் ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்பட்டு, விடுதலையோடு ஜனங்கள் தேவனை ஆராதிக்க விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.    


October 2026

                                                    வடக்கு மண்டலம்



அக்டோபர் : 12 தர்பங்கா, மதுபனி, லதன்யா, நிர்மலி மற்றும் ஜன்ஜார்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை பெங்களுரைச் சேர்ந்த ஆPவுஊ மாணவர்கள் பார்வையிட்டதுடன், கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களுடனும் இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டு தேவனை மகிமைப்படுத்தினர். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள ஜெபிப்போம்.  

அக்டோபர் : 13 சீத்தாமடி பணித்தளத்தில், செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 300 பேர் பங்குபெற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் இக்கூடுகையில் தேவசெய்தியளித்து ஜனங்களுக்காக ஜெபித்தார். விசுவாசிகள் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும், பெலவீனமாயிருக்கும் விசுவாசிகளை கர்த்தர் குணமாக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 14 ராம்பூர், புல்வாரி ஷெரீப் மற்றும் பர்சா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகைகளில் 500 வாலிபர்கள் பங்கேற்றனர்; இக்கூடுகையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த சகோ. அவினாஷ், வாலிபர்களுக்கேற்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபர்களின் அனுதின வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தார். ஜெப வேளையின்போது அநேக வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணத்தில் நிலைத்து நிற்கவும், தேவனுக்கு உகந்த சாட்சிகளாக தொடர்ந்து ஜீவிக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 15 வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் வேதாகமக் கல்லூரி, தெபோராள் பயிற்சி மையம், சீஷத்துவப் பயிற்சி மையம் மற்றும் தையற் பயிற்சி மையம் போன்ற பயிற்சி ஊழியங்களுக்காகவும், இங்கு பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் பயிற்சியளிக்கும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 16 ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம். 




SEP 2025

                                                         வடக்கு மண்டலம்



செப்டம்பர் 11 மதேபூரா பணித்தளத்தில் புதிதாக சீஷத்துவப் பயிற்சி மையத்தினைத் (DTC) தொடங்க கர்த்தர் உதவி செய்தார். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஸ்டீபன் ஆகியோர் ஜெபத்துடன் பயிற்சி மையத்தினைத் தொடங்கி வைத்தனர். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சுவிசேஷங்களாக மாறவும், இவர்கள் மூலமாக அவர்களது சொந்த ஜனங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 12 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தினங்கள், தேவரியா மற்றும் பாரூ பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்களில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டங்களில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களுக்காக ஜெபித்தனர். அநேகர்  பாவப்பிடியிலிருந்தும் மற்றும் பிசாசின் பிடியிலிருந்தும்  விடுதலையாகி, தேவனை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டு வரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 13 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணித்தள மக்கள், வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய தேசம் இரட்சகரை அறிந்து கொள்ளவும், கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் சுவிசேஷத்திற்கு செவி கொடுக்கவும், பணித்தளங்களில் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 14 திமோத்தேயு வேதாகமக் கல்லூரி (TBC), சீஷத்துவப் பயிற்சி மையம் (DTC), பெண்கள் பயிற்சி மையம் (GTC) மற்றும் தையல் பயிற்சி மையம் (SETUP)  ஆகிய பயிற்சி மையங்களில், புதிதாக மாணவ மாணவியரைச் சேர்க்க கர்த்தர் உதவி செய்தார். இப்பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்கள் தேவனுக்குச் சாட்சியாக வாழவும், பயிற்சி அளிக்கும் ஊழியர்களுக்கு தேவன் விசேஷித்த கிருபைகளைக் கட்டளையிடவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 15 சமஸ்திப்பூர், ரொசேரா, கஹல்காவ் ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டுவதற்காக விரைவில் நிலம் வாங்கப்படவும், கியோட்டி ரன்வே பணித்தளத்தில்  வாங்கப்பட்டுள்ள நிலத்தில் ஆலயம் கட்டுவதற்கானத் தேவைகள் சந்திக்கப்படவும், மகுவல் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் விரைவில் நிறைவு பெறவும் மற்றும் கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம்.

August 2025

                                                    வடக்கு மண்டலம்


ஆகஸ்ட் 11 குஷ்ருபூர் பணித்தளத்தில்  இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் சகோ. எமர்சன் தேவ செய்தி அளித்து, ஜனங்களுக்காக ஜெபித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார். இந்தக் கூட்டத்தில் 200 விசுவாசிகள் பங்கு பெற்றனர். மகுவல் பணித்தளத்தில் நடைபெற்று வருகிற ஊழியர் இல்லப் பணிகள்  தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறவும் மற்றும் அதன் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 12  தர்பங்கா பணித்தளத்தில் வேதாகமக் கல்லூரியின் 9 - வது அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று, தேவ செய்தி அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அவ்வாறே, தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்பின் முதலாம் அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியும் தேவ ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.  பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், சுவிசேஷப் பணியில் உற்சாகமாக முன்னேறிச் செல்லவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 13 ஜூலை 8 அன்று பர்சா ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில்,  சகோதரி சிஜி ஷாஜன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 300 பெண்கள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் ஊழியங்கள் நல்ல பலன்களை தரவும், பெண்கள் மூலமாகச் சமுதாயத்தில் மாற்றங்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 14  புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், 120 வாலிப சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளை வழங்கி, தேவ செய்தி அளித்து வாலிபர்களை உற்சாகப்-படுத்தினார்கள். பணித்தளங்களில் போதையின் பிடியில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும், மேற்படிப்பிற்காகக் காத்திருக்கும் வாலிபர்களுக்கு ஏற்ற வழி வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 15 பாரூ பணித்தளத்தில் ஜூலை  12 அன்று ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார்கள் இந்தக் கூட்டத்தில் 137 விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகிவரும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 16 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தினங்கள், வடக்கு மண்டலத்தின் மூன்று ஆங்கில வழிப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கூடுகை நடைபெற்றது. னுச. ஜோ பால்சன், சகோ. ஆனந்த குமார் மற்றும் சகோ. சார்லஸ் ஹ_ல்சன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூடுகையில், 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெம்ஸ் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காகவும் ,அவர்கள் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.


July 2025

                                                   வடக்கு மண்டலம்


ஜுலை 12 ஜுன் 20 அன்று சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 130 பேர் பங்கேற்றனர். போதகர் ராஜன் (மதுரை) இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களுக்காக ஜெபித்தார். சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இங்குள்ள குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், சுவிசேஷத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

ஜுலை 13 ராஜ்நகர் பணித்தளத்தில் ஜுன் 21 அன்று ஒருநாள் வாலிபர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஆனந்தன் ஆகியோர் தேவசெய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தனர். 60 வாலிப சகோதர சகோதரிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். பணித்தள வாலிபர்களின் இரட்சிப்பிற்காகவும், வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் பலனைத் தரவும், போதை வஸ்துகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 14 வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களிலும் மற்றும்; அவைகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விடுமுறை வேதாகமக் கல்வி ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியர்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கு கர்த்தர் கொடுத்த திறந்த வாசலுக்காக அவரைத் துதிக்கிறோம். இச்சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும், கல்விக்காகவும் மற்றும் இவர்களது பெற்றோருக்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 15 பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் சுகத்திற்காகவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்கள்.......... தடையின்றி நிறைவேற்றப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 16 கடந்த மாதத்தில் இயேசு கிறிஸ்துவைதங்கள் வாழ்க்கையின்  சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஜெம்ஸ் காப்பகங்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், பணித்தளங்களில் செயல்பட்டுவரும் சீஷத்துவப் பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும் 


June 2025

 



☁       மே 1 அன்று தர்பங்கா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஒரு நாள் கூடுகையில், தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள 10 பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் கலந்துகொண்டனர். இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். சுமார் 200-க்கும் அதிகமான விசுவாசிகள் இக்கூடுகையில் பங்குபெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.

பாட்னாவின் பர்ஷா பணித்தளத்தில் மே 11 அன்று நடைபெற்ற தையற் பயிற்சி மையத்தின் (SETUP) 13 வது அணி மாணவர்களுக்கான ஒரு வருட பயிற்சி நிறைவு சான்றளிப்பு நிகழ்ச்சியில், 15 மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. தேவனுக்கே மகிமை! தொடர்ந்து ஜுலை 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் புதிய அணிக்காகவும் மற்றும் அதில் இணையவிருக்கும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மே 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கோஹியா, தர்பங்கா மற்றும் பௌவாரி ஆகிய கிராமங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். இதன் மூலமாக, 235 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் கிருபை செய்தார். விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

கர்த்தருடைய பெரிதான கிருபையினால், மே 8,10,12 ஆகிய மூன்று நாட்கள், வடக்கு மண்டலத்தில் மூன்று திருமணங்களை கிறிஸ்தவ முறைப்படி நடத்திமுடிக்க தேவன் கிருபை செய்தார்.

விசுவாசப்     பிள்ளைகளுக்கு    ..கிறிஸ்தவ முறைப்படி திருமணங்கள் நடத்தப்படவும், சரியான வாழ்க்கைத்  துணை கிடைக்க தேவன் கிருபை செய்யவும் ஜெபிப்போம்.

MAY 2025

   வடக்கு மண்டலம்


•  மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற ........விடுமுறை வேதாகமப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஜெம்ஸ் சிறுவர் ஊழியத்தின் ஊழியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கும் வழிமுறையினை பல்வேறு விதங்களில் எடுத்துக்கூறினர். 

சிசோ பணித்தளத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 250 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.

கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் கல்வி ஊழியத்துடன், 87 சிறுபிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்கவும் மற்றும் ஞாயிறுப் பள்ளியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கவும், இப்பணித்தளங்களில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாகக் காண்பிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஞாயிறு ஆராதனையினைத் தொடர்ந்து, சகர்ஷா பணித்தளத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். 

வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களில், சிறுவர் ஊழியத்திற்கான வாசல்களை தேவன் திறந்துள்ளார்; தேவனுக்கே மகிமை! இச்சிறுவர் ஊழியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.

பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெற- விருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி  ஊழியங்களில் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவும் மற்றும் எவ்வித இடையூறுமின்றி ஊழியங்கள் நடைபெறவும், இயேசு கிறிஸ்துவை அறியாத சிறுவர் சிறுமியர்கள் இவ்வூழியத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 


April 2025

 வடக்கு மண்டலம்


• சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறுவர் கூடுகையில் 45 சிறுவர் பங்கேற்றனர். ஊழியர்கள் சகோ. ஸ்டீபன் மற்றும் சகோ. இனிகோ ஆகியோர் வேதவசனங்களின் அடிப்படையில் சிறுவர்களுக்கேற்ற செய்திகளைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

• மார்ச் 8 அன்று பாபுபர்ஹி பணித்தளத்தில் நடைபெற்ற ஆலய அர்ப்பணிப்பினை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் மற்றும் பணித்தள விசுவாசிகள் இணைந்து தேவனை ஆராதிக்க, சகோ. குணசேகரன் ஜெபத்துடன் ஆலயத்தினைத் திறந்துவைத்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையிலும் கர்த்தருடைய வார்த்தையினைப் பகிர்ந்துகொண்டு விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, ஜஞ்ஜர்பூர் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லமும் மார்ச் 9 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது; தேவனுக்கே மகிமை!

• மார்ச் 12 அன்று பாட்னா மாவட்டத்தின் அட்மல்கோலா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஆலயத்தினை, சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் அர்ப்பணித்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையிலும் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

• மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோதரி சஜிலா நார்ட்டன் மற்றும் சகோதரி செல்வி ஆனந்தன் ஆகியோர் தேவ செய்தியளித்து, கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்தினர். இக்கூடுகையில், 153 பெண்கள் பங்கேற்றனர்.

• கோர்ஹியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவும், தடைகள் நீங்கவும் ஜெபிப்போம். 

March 2025

வடக்கு மண்டலம்

 


  • உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பரிதாபாத்-ல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜெம்ஸ் வடக்கு மண்டல தலைவர்களுக்கான குடும்பக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தள ஊழியங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கவும், ஊழியங்களுக்கடுத்த தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளவும், தேவனுடைய பாதத்தில் காத்திருக்கவும், தேவனுடைய வார்த்தைகளைத் தியானிக்கவும் கிடைத்த தருணங்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்துகின்றோம். 
  • பிப்ரவரி 12 அன்று, தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற மைதிலி-1 கோட்டத்தின் சபை மூப்பர்களுக்கான கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கலந்துகொண்டு, தேவ வார்த்தையின் மூலமாகவும் மற்றும் பல்வேறு ஆலோசனைகளின் வாயிலாகவும் சபை மூப்பர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார். 
  • அட்மல்கோலா மற்றும் பாபுபர்ஹி ஆகிய பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் இறுதி நிலையினை எட்ட கிருபைசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இவ்வாலயத்தின் மீதமுள்ள பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவில் நிறைவடையவும், ஜனங்கள் உற்சாகமுடன் தேவனை ஆராதிக்க வழிதிறக்கவும் ஜெபிப்போம். 
  • பணித்தள ஊழியங்களுக்காகவும், அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் மற்றும் பணித்தளங்களில் உண்டாகும் தடைகள் நீங்கவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகளது பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் இளைஞர் சேகர் விஷ்ணு பாஸ்வான் விரைவில் குணமடையவும் ஜெபிப்போம். 

FEBRUARY 2025

வடக்கு மண்டலச் செய்திகள் 




  • ஜனவரி 17 அன்று புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் தொலை தூர மருத்துவ மையம் (Tele Medicine Unit - TMU) தொடங்க கர்த்தர் கிருபை செய்தார். இம்மையத்தின் வாயிலாக, மருத்துவப் பணியோடு 
  • சுவிசேஷமும் இப்பணித்தளத்தில் பரவும்படியான வாசலை தேவன் திறந்துள்ளார். அத்துடன், புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் ஜனவரி 17 அன்று நடைபெற்ற வாலிபருக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிகளில் 
  • சகோ. ராகேஷ் குமார் மற்றும் Dr. ரீனா கோபோர்த் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். 
  • கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு ஞாயிறு ஆராதனையில் 850 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இந்த ஆராதனையில் கலந்துகொண்ட கிறிஸ்துவை அறிந்திராத அநேகருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 
  • பாட்னா, ஜெம்ஸ் செயல் மையத்தில் ஜனவரி 18 அன்று நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில், 120 பெண்கள் பங்கேற்றனர்; சகோதரி சஜிலா நார்டன் மற்றும் சகோதரி சிஜி ஷாஜன் ஆகியோர் தேவ வசனங்களின் மூலம் விசுவாசிகளை உற்சாகப்படுத்தி ஜெபத்தில் வழிநடத்தினர்.
  • ஐந்து வருடமாக பிசாசின் பிடியினால் கஷ்டப்பட்ட சகோதரி சங்கீதா குமாரி, ஜெபத்தின் பலனால் பூரண குணமடைந்தார்; தேவனுக்கே மகிமை!  
  • கடந்த மாதத்தில், வடபீஹார் பணித்தளங்களில் வாழும் கிறிஸ்துவை அறியாத சுமார் 25000 பேருக்கு நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். 
  • பாபுபர்ஹி மற்றும் அட்மல்கோலா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சகர்ஷா மற்றும் ஜஞ்சர்பூர் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் குளிர் காலங்களில் ..ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.