வடக்கு மண்டலம்
- உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பரிதாபாத்-ல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜெம்ஸ் வடக்கு மண்டல தலைவர்களுக்கான குடும்பக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தள ஊழியங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கவும், ஊழியங்களுக்கடுத்த தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளவும், தேவனுடைய பாதத்தில் காத்திருக்கவும், தேவனுடைய வார்த்தைகளைத் தியானிக்கவும் கிடைத்த தருணங்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்துகின்றோம்.
- பிப்ரவரி 12 அன்று, தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற மைதிலி-1 கோட்டத்தின் சபை மூப்பர்களுக்கான கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கலந்துகொண்டு, தேவ வார்த்தையின் மூலமாகவும் மற்றும் பல்வேறு ஆலோசனைகளின் வாயிலாகவும் சபை மூப்பர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார்.
- அட்மல்கோலா மற்றும் பாபுபர்ஹி ஆகிய பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் இறுதி நிலையினை எட்ட கிருபைசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இவ்வாலயத்தின் மீதமுள்ள பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவில் நிறைவடையவும், ஜனங்கள் உற்சாகமுடன் தேவனை ஆராதிக்க வழிதிறக்கவும் ஜெபிப்போம்.
- பணித்தள ஊழியங்களுக்காகவும், அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் மற்றும் பணித்தளங்களில் உண்டாகும் தடைகள் நீங்கவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகளது பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் இளைஞர் சேகர் விஷ்ணு பாஸ்வான் விரைவில் குணமடையவும் ஜெபிப்போம்.