Feb 2026

 


பிப்ரவரி 10 பகுவாரி கிராமத்தில் கைப்பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் வாயிலாக சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்; தொடர்ந்து இக்கிராமத்தில் நடைபெற்ற நற்செய்திக் கூட்டங்களில் 250 பேர் பங்கேற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, கூடிவந்தவர்களுக்காக ஜெபித்தார். இக்கிராமத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவும், ஊழியத்திற்கான வாசல் திறக்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 11 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூடுகையில், 750 மாணவர் மற்றும் மாணவியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 950 பேருக்கு நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 12 தர்பங்கா மாவட்டத்தில் முடிடப்பட்டிருந்த சபையினை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் ஜனவரி 15 அன்று மீண்டும் திறக்கவும், ஆராதனை நடத்தவும் கர்த்தர் உதவிசெய்தார். இம்மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தளங்களில் ஆராதனை எவ்விதத் தடையின்றி நடைபெறவும் ஜெபிப்போம். 

பிப்ரவரி 13 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், ஜனவரி 21 அன்று சியோகர் பணித்தளத்தில் புதிதாக Children Club தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் சிறுவர் ஊழியங்களுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணியின் மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.

பிப்ரவரி 14 பெனிப்பூர் பணித்தளத்தில் திடீரென வந்த சமூக விரோதிகள், ஜெம்ஸ் ஊழியரை அடித்து, ஆலயத்தின் கதவு மற்றும் முன் வாசலை பூட்டி, தங்கள் மதத்தின் கொடியையும் ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து காணப்பட்டுவரும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.    

Jan 2026

 



ஜனவரி -  13 
ஷாவக்பூர் பணித்தளத்தில் ஒருநாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது; விசுவாசிகள் விசுவாசத்தில் வளரவும், தங்கள் ஜெப வாழ்க்கையில் முன்னேறவும் மற்றும் வசனத்தை அறிந்துகொள்ளவும் இக்கூடுகை வழிவகுத்தது. சென்னையைச் சேர்ந்த சகோ. ரூபன் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், ஆத்தும ஆதாயகர்களாக மாறி கர்த்தருடைய மந்தையில் ஆத்துமாக்களை சேர்க்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  14 மைதிலி  1 கோட்டத்தின் தர்பங்கா மற்றும் சிசோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஜெம்ஸ் பெண்கள் முன்னேற்ற ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு தேவ செய்தியுடன், பெண்களின் வாழ்க்கைக்கான சிறப்பு ஆலோசனைகளையும் வேத வசனங்களின் அடிப்படையில் அளித்து அவர்களுக்காக ஜெபித்தனர். கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மத்தியிலும் தேவனை பிறருக்கு அறிவிக்கவும், தங்கள் குடும்பங்களில் எரியும் தீபங்களாக விளங்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 15 டிசம்பர் 12, 2025 அன்று ராம்பூர் மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 90 பேர் கலந்துகொண்டனர்; சகோதரி சஜிலா நார்டன் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். குளிர் நாட்களில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், பணித்தளங்களில் காணப்பட்டுவரும் ஊழியத்திற்கு எதிராக விரோதங்கள் மாறவும், எதிர்ப்போர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  16 நிர்மாலி மற்றும் மணிகாச்சி ஆகிய பணித்தளங்களில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு தின நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் குறுநாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை எடுத்துக்கூறி, சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளங்களில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஆத்தும அறுவடை இப்பகுதியில் பெருகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  17 கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் டிசம்பர் 21 அன்று ஞாயிறு பள்ளி பிள்ளைகள் மூலம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் வாயிலாக, பங்கேற்ற பணித்தள மக்கள் பலருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில், 260 ஞாயிறு பள்ளி சிறுவர் சிறுமியரும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்கள் மூலமாக சமுதாயமும் குடும்பங்களும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

December 2025

   வடக்கு மண்டலம்


டிசம்பர் 07 பசோபட்டி பணித்தளத்தில் ஒருநாள் பெண்கள் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சமுதாயத்திலும் மற்றும் குடும்பத்திலும் கிறிஸ்துவின் அன்பினை வெளிப்படுத்தும் பாத்திரங்களாக பெண்கள் செயல்பட நடைமுறை ஆலோசனைகளுடன் தேவசெய்தியையும் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினார் சகோதரி சஜிலா நார்டன். இக்கூட்டத்தில் 90 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காக ஜெபிப்போம். 

டிசம்பர் 08 மாணவர் ஞாயிறை முன்னிட்டு, நவம்பர் 9 அன்று, வடக்கு மண்டலத்தின் அனைத்து பணித்தள ஆலயங்களிலும், ஞாயிறுப் பள்ளி மாணவர்கள் மூலமாக நடைபெற்ற ஆராதனை தேவ நாமத்தை மகிமைப்படுத்தியதுடன், சபை மக்களுக்கும் மற்றும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. பணித்தளத்தில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் சிறுவர் மற்றும் ஞாயிறுப் பள்ளி ஊழியங்களுக்காக ஜெபிப்போம்.  

டிசம்பர் 09 தர்பங்கா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகளை நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்க கர்த்தர் உதவிசெய்தார். இப்பணிகள் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறவும், திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் பணிகள் நிறைவடையவும் ஜெபிப்போம். 

டிசம்பர் 10 மதுபனி பணித்தளத்தில், நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் மற்றும் ராஜ்நகர் பணித்தளத்தில் நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற பெண்கள் கூடுகையையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகைகளில்  ஜெம்ஸ்-ன் Advance WET Team ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு, தேவ செய்தியளித்து பங்கேற்றோருக்காக ஜெபித்தனர். இக்கூடுகைகளில், 167 சகோதரிகள் பங்கேற்றனர். பணித்தள பெண்கள் மூலமாக குடும்பத்திலும் மற்றும் சமுதாயத்திலும் வரும் நாட்களில் கர்த்தர் மாற்றங்களைக் கொண்டுவர ஜெபிப்போம். 

டிசம்பர் 11 பாட்னாவில் நடைபெற்றுவரும் ஜெம்ஸ் தையற்பயிற்சி மையத்தில் பயிற்சிபெறும் சகோதரிகளுக்காகவும், பீஹாரில் அமைந்துள்ள புதிய அரசிற்காகவும் மற்றும் பாட்னாவில் நடைபெற்றுவரும் வாலிபர் ஊழியங்கள் மூலமாக அநேக வாலிபர்கள் கிறிஸ்துவண்டை வழிநடத்தப்படவும் ஜெபிப்போம்.  


November 2025

                                                   வடக்கு மண்டலம்



நவம்பர் 11 மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில் மதுபனி மற்றும் சுற்றியுள்ள பணித்தளங்களைச் சேர்ந்த சபை விசுவாசிகள் சுமார் 450 பேர் உற்சாகமாகப் பங்கெடுத்தனர். இக்கூட்டங்களில், சகோ. எமர்சன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றவர்களை ஜெபத்தில் வழிநடத்தினார். பணித்தள விசுவாசிகளின் சாட்சியுள்ள வாழ்க்கைக்காகவும், விசுவாசிகளின் உறவினர்கள் கிறிஸ்துவை கண்டுகொள்ளவும் மற்றும் விசுவாசிகளின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 12 பர்சா பணித்தளத்தின் ஜெம்ஸ் செயல்மையத்தில் நடைபெற்ற ஞாயிறுப் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு முகாமில் 75 பேர் பங்கேற்றனர். பணித்தளங்களில் சிறுவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும். ஞாயிறுப் பள்ளி வாயிலாக அவர்களை கிறிஸ்துவண்டை வழிநடத்தவும் போதிய ஆலோசனைகளுடன், தேவ செய்தியின் மூலமாக அவர்களது உள்ளத்தில் சிறுவர்களைக் குறித்த பாரத்தையும் விதைக்க கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியங்கள் நல்ல பலனைத் தரவும், அவர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் கல்வி ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம். 

நவம்பர் 13 கோரியா பணித்தளத்தில் அக்டோபர் 2 அன்று நடைபெற்ற வாலிபர் கூடுகையில், 60 வாலிப சகோதர மற்றும் சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் வாலிபர்களது வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனையுடன், தேவ செய்தியையும் அளித்து, கிறிஸ்துவின் அன்பில் வேரூன்றி நிற்கவும், அவருக்காக சாட்சிகளாக வாலிபத்தில் வாழவும் வாலிபர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார். ஜெப வேளையின்போது, வாலிபர்களில் பலர் தங்கள் வாழ்க்கையைக் கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர்; தேவனுக்கே மகிமை! பணித்தளங்களில் காணப்படும் வாலிபர்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், வாலிபர்கள் பாவப் பழக்கவழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும் ஜெபிப்போம். 

நவம்பர் 14 தர்பங்கா பணித்தளத்தில் அக்டோபர் 10 அன்று நடைபெற்ற சுத்திகரிப்புக் கூட்டத்தில், பணித்தள விசுவாசிகள் 350 பேர் பங்கேற்றனர்; சகோ. ராகேஷ் குமார் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். 

நவம்பர் 15 பணித்தளங்களில் ஊழியத்திற்குக் காணப்படும் எதிர்ப்புகள் மாறவும், ஆலயமில்லாத இடங்களில் விரைவில் ஆலயத்திற்கான நிலங்கள் வாங்கப்பட்டு, விடுதலையோடு ஜனங்கள் தேவனை ஆராதிக்க விரைவில் ஆலயம் கட்டப்படவும், ஊழியர்களின் சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.    


October 2026

                                                    வடக்கு மண்டலம்



அக்டோபர் : 12 தர்பங்கா, மதுபனி, லதன்யா, நிர்மலி மற்றும் ஜன்ஜார்பூர் ஆகிய பணித்தளங்களில் நடைபெறும் ஊழியங்களை பெங்களுரைச் சேர்ந்த ஆPவுஊ மாணவர்கள் பார்வையிட்டதுடன், கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் செயல்பட்டுவரும் ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளுக்கும் சென்று அங்கு பணிபுரியும் ஊழியர்களுடனும் இணைந்து ஊழியத்தில் ஈடுபட்டு தேவனை மகிமைப்படுத்தினர். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளிகளில் பணிபுரியும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கிறிஸ்துவைக் கண்டுகொள்ள ஜெபிப்போம்.  

அக்டோபர் : 13 சீத்தாமடி பணித்தளத்தில், செப்டம்பர் 10 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 300 பேர் பங்குபெற்றனர்; சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் இக்கூடுகையில் தேவசெய்தியளித்து ஜனங்களுக்காக ஜெபித்தார். விசுவாசிகள் பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும், பெலவீனமாயிருக்கும் விசுவாசிகளை கர்த்தர் குணமாக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 14 ராம்பூர், புல்வாரி ஷெரீப் மற்றும் பர்சா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற வாலிபர் கூடுகைகளில் 500 வாலிபர்கள் பங்கேற்றனர்; இக்கூடுகையில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னையைச் சேர்ந்த சகோ. அவினாஷ், வாலிபர்களுக்கேற்ற செய்தியைப் பகிர்ந்துகொண்டதுடன், வாலிபர்களின் அனுதின வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளையும் வழங்கி அவர்களுக்காக ஜெபித்தார். ஜெப வேளையின்போது அநேக வாலிபர் தங்கள் வாழ்க்கையை கிறிஸ்துவுக்கென்று அர்ப்பணித்தனர். அர்ப்பணித்த வாலிபர்கள் அர்ப்பணத்தில் நிலைத்து நிற்கவும், தேவனுக்கு உகந்த சாட்சிகளாக தொடர்ந்து ஜீவிக்கவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 15 வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் வேதாகமக் கல்லூரி, தெபோராள் பயிற்சி மையம், சீஷத்துவப் பயிற்சி மையம் மற்றும் தையற் பயிற்சி மையம் போன்ற பயிற்சி ஊழியங்களுக்காகவும், இங்கு பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும் மற்றும் பயிற்சியளிக்கும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். 

அக்டோபர் : 16 ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் கட்டிமுடிக்கப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும் ஜெபிப்போம். 




SEP 2025

                                                         வடக்கு மண்டலம்



செப்டம்பர் 11 மதேபூரா பணித்தளத்தில் புதிதாக சீஷத்துவப் பயிற்சி மையத்தினைத் (DTC) தொடங்க கர்த்தர் உதவி செய்தார். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஸ்டீபன் ஆகியோர் ஜெபத்துடன் பயிற்சி மையத்தினைத் தொடங்கி வைத்தனர். இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சுவிசேஷங்களாக மாறவும், இவர்கள் மூலமாக அவர்களது சொந்த ஜனங்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 12 ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தினங்கள், தேவரியா மற்றும் பாரூ பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு கன்வென்ஷன் கூட்டங்களில் 150 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டங்களில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து ஜனங்களுக்காக ஜெபித்தனர். அநேகர்  பாவப்பிடியிலிருந்தும் மற்றும் பிசாசின் பிடியிலிருந்தும்  விடுதலையாகி, தேவனை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டனர். இப்பணித்தளத்தில் செய்யப்பட்டு வரும் ஊழியங்களுக்காகவும் மற்றும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோர் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும் ஜெபிப்போம்.

செப்டம்பர் 13 சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று பள்ளிகள் மற்றும் மண்டல அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பணித்தள மக்கள், வாலிபர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்திய தேசம் இரட்சகரை அறிந்து கொள்ளவும், கிறிஸ்துவை அறியாத ஜனங்கள் சுவிசேஷத்திற்கு செவி கொடுக்கவும், பணித்தளங்களில் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 14 திமோத்தேயு வேதாகமக் கல்லூரி (TBC), சீஷத்துவப் பயிற்சி மையம் (DTC), பெண்கள் பயிற்சி மையம் (GTC) மற்றும் தையல் பயிற்சி மையம் (SETUP)  ஆகிய பயிற்சி மையங்களில், புதிதாக மாணவ மாணவியரைச் சேர்க்க கர்த்தர் உதவி செய்தார். இப்பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்கள் தேவனுக்குச் சாட்சியாக வாழவும், பயிற்சி அளிக்கும் ஊழியர்களுக்கு தேவன் விசேஷித்த கிருபைகளைக் கட்டளையிடவும் ஜெபிப்போம். 

செப்டம்பர் 15 சமஸ்திப்பூர், ரொசேரா, கஹல்காவ் ஆகிய பணித்தளங்களில் ஆலயம் கட்டுவதற்காக விரைவில் நிலம் வாங்கப்படவும், கியோட்டி ரன்வே பணித்தளத்தில்  வாங்கப்பட்டுள்ள நிலத்தில் ஆலயம் கட்டுவதற்கானத் தேவைகள் சந்திக்கப்படவும், மகுவல் பணித்தளத்தில் கட்டப்பட்டுவரும் ஊழியர் இல்லப் பணிகள் விரைவில் நிறைவு பெறவும் மற்றும் கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம்.

August 2025

                                                    வடக்கு மண்டலம்


ஆகஸ்ட் 11 குஷ்ருபூர் பணித்தளத்தில்  இரண்டு நாட்கள் நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் சகோ. எமர்சன் தேவ செய்தி அளித்து, ஜனங்களுக்காக ஜெபித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார். இந்தக் கூட்டத்தில் 200 விசுவாசிகள் பங்கு பெற்றனர். மகுவல் பணித்தளத்தில் நடைபெற்று வருகிற ஊழியர் இல்லப் பணிகள்  தொடர்ந்து நல்ல முறையில் நடைபெறவும் மற்றும் அதன் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 12  தர்பங்கா பணித்தளத்தில் வேதாகமக் கல்லூரியின் 9 - வது அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் பங்கேற்று, தேவ செய்தி அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர். அவ்வாறே, தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் சீஷத்துவப் பயிற்சி வகுப்பின் முதலாம் அணி மாணவர்களுக்கான சான்றளிப்பு நிகழ்ச்சியும் தேவ ஆசீர்வாதத்துடன் நடைபெற்றது.  பயிற்சிபெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவை வெளிப்படுத்தவும், சுவிசேஷப் பணியில் உற்சாகமாக முன்னேறிச் செல்லவும் ஜெபிப்போம். 

ஆகஸ்ட் 13 ஜூலை 8 அன்று பர்சா ஜெம்ஸ் செயல் மையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். இக்கூடுகையில்,  சகோதரி சிஜி ஷாஜன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார். 300 பெண்கள் இக்கூடுகையில் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் பெண்கள் மத்தியில் செய்யப்பட்டு வரும் ஊழியங்கள் நல்ல பலன்களை தரவும், பெண்கள் மூலமாகச் சமுதாயத்தில் மாற்றங்கள் உண்டாகவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 14  புல்வாரிஷெரீப் பணித்தளத்தில் ஜூலை 11 அன்று நடைபெற்ற வாலிபர்களுக்கான சிறப்புக் கூடுகையில், 120 வாலிப சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற நடைமுறை ஆலோசனைகளை வழங்கி, தேவ செய்தி அளித்து வாலிபர்களை உற்சாகப்-படுத்தினார்கள். பணித்தளங்களில் போதையின் பிடியில் சிக்கி இருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும், மேற்படிப்பிற்காகக் காத்திருக்கும் வாலிபர்களுக்கு ஏற்ற வழி வாசல்கள் திறக்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 15 பாரூ பணித்தளத்தில் ஜூலை  12 அன்று ஒரு நாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது. இதில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஷாஜன் ஆகியோர் தேவ செய்தி அளித்து, ஜனங்களை உற்சாகப்படுத்தினார்கள் இந்தக் கூட்டத்தில் 137 விசுவாசிகள் பங்குபெற்றனர். ஆலயம் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும், பணித்தளங்களில் ஊழியத்திற்கு உண்டாகிவரும் தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.

ஆகஸ்ட் 16 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில், ஜூலை 18 மற்றும் 19 ஆகிய தினங்கள், வடக்கு மண்டலத்தின் மூன்று ஆங்கில வழிப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கான கூடுகை நடைபெற்றது. னுச. ஜோ பால்சன், சகோ. ஆனந்த குமார் மற்றும் சகோ. சார்லஸ் ஹ_ல்சன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். இக்கூடுகையில், 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஜெம்ஸ் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காகவும் ,அவர்கள் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.