.jpg)
July 2026
.jpg)
June 2026
ஜூன் 11 ஆத்தும ஆதாயப் பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு, 'each one catch one' என்ற கருப்பொருளினை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஆத்தும ஆதாயகப் பயிற்சி முகாமில், பர்சா, ராம்பூர், குஷ்ருபூர் ஆகிய பணித்தளங்களைச் சேர்ந்த 168 பேர் பங்கேற்றனர். இம்முகாமில், சகோ. சுனில், ஆத்ம ஆதாயப் பணிக்கேற்ற ஆலோசனைகளையும் மற்றும் அவசியத்தையும் பங்கேற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார். பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் ஆத்தும ஆதாயப் பணிகளுக்காகவும், ஆத்தும அறுவடையாளர்கள் பெருகவும் ஜெபிப்போம்.
ஜூன் 14 பணித்தளங்களில் நடைபெற்றுவரும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்து வருகிறார். கோரியா பணித்தளத்தில் மே 7, 8, 9 ஆகிய தினங்கள் நடைபெற்ற விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களின் மூலமாக, 400 சிறுவர் சிறுமியருக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவி செய்தார். தொடர்ந்து பணித்தளங்களில் நடக்கவிருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களுக்காகவும், சிறுவர்கள் கிறிஸ்துவைக் கண்டு கொள்ளவும் ஜெபிப்போம்.
May 2026
மே 11 தர்பங்காவின் கோரியா பணித்தளத்தில், கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 5 அன்று நடைபெற்ற சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில், 180 ஞாயிறுப் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். சிறப்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிள்ளைகளுக்கான வேதாகமத் தேர்வுகளும் நடத்தப்பட்டு, பிள்ளைகளை உற்சாகப்படுத்தும்படியாக பரிசுகளும் வழங்கப்பட்டன. பணித்தளங்களில் செய்யப்பட்டுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அநேக கிராமங்களில் ஞாயிறுப் பள்ளிகள் தொடங்கப்படவும் ஜெபிப்போம்.
மே 12 ஏப்ரல் 11 அன்று தானாபூர் பணித்தளத்தில் நடைபெற்ற எட்டு மணி நேர ஊழியர் குடும்ப உபவாசக் கூடுகையை கர்த்தர் ஆசீர்வதித்தார். சகோதரி எலிசபெத் குழுவினர் (சென்னை) ஜெபக்குறிப்புகளைக் கூறி ஊழியர்களை ஜெபத்தில் வழிநடத்த, சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஷாஜன் ஆகியோர் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டனர். வடக்கு மண்டலத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி ஊழியங்களுக்காகவும் மற்றும் காப்பகங்களுக்காகவும் ஜெபிப்போம்.
மே 13 சமஸ்திபூர் பணித்தளத்தில் ஏப்ரல் 17 அன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 55 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஸ்டீபன் ஆகியோர் தேவசெய்தியினைப் பகிர்ந்துகொண்டு, பங்கேற்றோரை ஜெபத்தில் வழிநடத்தினர். பணித்தளப் பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், குடும்பத்தினரை கிறிஸ்துவண்டை நடத்தும் கருவிகளாக மாறவும் ஜெபிப்போம்.
மே 14 பர்சா பணித்தளத்தில் ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற ஒருநாள் வேதாகமப் பயிற்சி வகுப்புகளை கர்த்தர் ஆசீர்வதித்தார். இப்பயிற்சி வகுப்புகளில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. சுனில் ஆகியோர் வேதாகமத்திலிருந்து பல்வேறு சத்தியங்களைக் கற்றுக்கொடுத்தனர்; இப்பயிற்சி வகுப்பில் 120 பேர் பங்கேற்றனர். விசுவாசிகள் வேத அறிவில் வளரவும், வசனத்திற்கு தங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் அளிக்கவும், விசுவாசிகளின் உறவினர் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.
மே 15 கியோட்டி ரன்வே மற்றும் தர்பங்கா ஜெம்ஸ் செயல் மையக் கட்டுமானப் பணிகள் எவ்விதத் தடையுமின்றி தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் கான்கிரீட் பணிகளுக்காகவும், ஆலயங்கள் இல்லாத பணித்தளங்களில் விரைவில் ஆலயங்கள் கட்டப்படவும் ஜெபிப்போம்.
April 2026
March 2026
Feb 2026
பிப்ரவரி 11 தர்பங்கா ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் கூடுகையில், 750 மாணவர் மற்றும் மாணவியருக்கு கிறிஸ்துவின்
அன்பினை அறிவிக்கவும் மற்றும் தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில்
சுமார் 950 பேருக்கு
நற்செய்தியினை அறிவிக்கவும் கர்த்தர் கிருபைசெய்தார். ஜெம்ஸ் ஆங்கிலப் பள்ளியில்
பயிலும் மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஊழியங்களுக்காகவும் மற்றும் மாணவர்களின்
பெற்றோர் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும்
ஜெபிப்போம்.
பிப்ரவரி 12 தர்பங்கா மாவட்டத்தில் முடிடப்பட்டிருந்த சபையினை, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்
உதவியுடன் ஜனவரி 15 அன்று மீண்டும்
திறக்கவும், ஆராதனை நடத்தவும்
கர்த்தர் உதவிசெய்தார். இம்மாவட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு உண்டாகிவரும் எதிர்ப்புகள் மாறவும், பணித்தளங்களில் ஆராதனை எவ்விதத் தடையின்றி
நடைபெறவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 13 கர்த்தருடைய பெரிதான கிருபையினால், ஜனவரி 21 அன்று சியோகர்
பணித்தளத்தில் புதிதாக Children Club தொடங்க கர்த்தர் உதவிசெய்தார்.
இப்பணித்தளத்தில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் சிறுவர்
ஊழியங்களுக்காகவும் மற்றும் இப்பணித்தளத்தில் செய்யப்பட்டுவரும் சுவிசேஷப் பணியின்
மூலமாக ஆத்துமாக்கள் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கப்படவும் ஜெபிப்போம்.
பிப்ரவரி 14 பெனிப்பூர் பணித்தளத்தில் திடீரென வந்த சமூக விரோதிகள், ஜெம்ஸ் ஊழியரை அடித்து, ஆலயத்தின் கதவு மற்றும் முன் வாசலை பூட்டி,
தங்கள் மதத்தின்
கொடியையும் ஏற்றிவிட்டுச் சென்றுள்ளனர். இப்பணித்தளத்தில் தொடர்ந்து
காணப்பட்டுவரும் எதிர்ப்புகள் மாறவும், எதிர்ப்பாளர்களை கர்த்தர் சந்திக்கவும், விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து
நிற்கவும் ஜெபிப்போம்.
Jan 2026
ஜனவரி - 13 ஷாவக்பூர் பணித்தளத்தில் ஒருநாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது; விசுவாசிகள் விசுவாசத்தில் வளரவும், தங்கள் ஜெப வாழ்க்கையில் முன்னேறவும் மற்றும் வசனத்தை அறிந்துகொள்ளவும் இக்கூடுகை வழிவகுத்தது. சென்னையைச் சேர்ந்த சகோ. ரூபன் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், ஆத்தும ஆதாயகர்களாக மாறி கர்த்தருடைய மந்தையில் ஆத்துமாக்களை சேர்க்கவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 14 மைதிலி 1 கோட்டத்தின் தர்பங்கா மற்றும் சிசோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஜெம்ஸ் பெண்கள் முன்னேற்ற ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு தேவ செய்தியுடன், பெண்களின் வாழ்க்கைக்கான சிறப்பு ஆலோசனைகளையும் வேத வசனங்களின் அடிப்படையில் அளித்து அவர்களுக்காக ஜெபித்தனர். கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மத்தியிலும் தேவனை பிறருக்கு அறிவிக்கவும், தங்கள் குடும்பங்களில் எரியும் தீபங்களாக விளங்கவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 15 டிசம்பர் 12, 2025 அன்று ராம்பூர் மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 90 பேர் கலந்துகொண்டனர்; சகோதரி சஜிலா நார்டன் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். குளிர் நாட்களில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், பணித்தளங்களில் காணப்பட்டுவரும் ஊழியத்திற்கு எதிராக விரோதங்கள் மாறவும், எதிர்ப்போர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 16 நிர்மாலி மற்றும் மணிகாச்சி ஆகிய பணித்தளங்களில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு தின நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் குறுநாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை எடுத்துக்கூறி, சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளங்களில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஆத்தும அறுவடை இப்பகுதியில் பெருகவும் ஜெபிப்போம்.
ஜனவரி - 17 கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் டிசம்பர் 21 அன்று ஞாயிறு பள்ளி பிள்ளைகள் மூலம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் வாயிலாக, பங்கேற்ற பணித்தள மக்கள் பலருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில், 260 ஞாயிறு பள்ளி சிறுவர் சிறுமியரும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்கள் மூலமாக சமுதாயமும் குடும்பங்களும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.





