வடக்கு மண்டலம்
• மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற ........விடுமுறை வேதாகமப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஜெம்ஸ் சிறுவர் ஊழியத்தின் ஊழியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கும் வழிமுறையினை பல்வேறு விதங்களில் எடுத்துக்கூறினர்.
• சிசோ பணித்தளத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 250 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.
• கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் கல்வி ஊழியத்துடன், 87 சிறுபிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்கவும் மற்றும் ஞாயிறுப் பள்ளியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கவும், இப்பணித்தளங்களில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாகக் காண்பிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார்.
• இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஞாயிறு ஆராதனையினைத் தொடர்ந்து, சகர்ஷா பணித்தளத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார்.
• வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களில், சிறுவர் ஊழியத்திற்கான வாசல்களை தேவன் திறந்துள்ளார்; தேவனுக்கே மகிமை! இச்சிறுவர் ஊழியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.
• பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெற- விருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களில் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவும் மற்றும் எவ்வித இடையூறுமின்றி ஊழியங்கள் நடைபெறவும், இயேசு கிறிஸ்துவை அறியாத சிறுவர் சிறுமியர்கள் இவ்வூழியத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம்.