July 2025

                                                   வடக்கு மண்டலம்


ஜுலை 12 ஜுன் 20 அன்று சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 130 பேர் பங்கேற்றனர். போதகர் ராஜன் (மதுரை) இக்கூட்டத்தில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, ஜனங்களுக்காக ஜெபித்தார். சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்றுவரும் ஊழியங்களுக்காகவும், இங்குள்ள குடும்பங்கள் கிறிஸ்துவை அறிந்துகொள்ளவும், சுவிசேஷத்திற்கு உண்டாகும் எதிர்ப்புகள் மாறவும் ஜெபிப்போம். 

ஜுலை 13 ராஜ்நகர் பணித்தளத்தில் ஜுன் 21 அன்று ஒருநாள் வாலிபர் கூடுகை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோ. ஆனந்தன் ஆகியோர் தேவசெய்தியளித்து, வாலிபர்களின் வாழ்க்கைக்கேற்ற ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்காக ஜெபித்தனர். 60 வாலிப சகோதர சகோதரிகள் இக்கூடுகையில் பங்கேற்றனர். பணித்தள வாலிபர்களின் இரட்சிப்பிற்காகவும், வாலிபர்கள் மத்தியில் செய்யப்பட்டுவரும் ஊழியங்கள் பலனைத் தரவும், போதை வஸ்துகளுக்கு அடிமைப்பட்டிருக்கும் வாலிபர்கள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 14 வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களிலும் மற்றும்; அவைகளைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் விடுமுறை வேதாகமக் கல்வி ஊழியங்களின் மூலமாக அநேக சிறுவர் சிறுமியர்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவை அறிவிக்கவும் கர்த்தர் உதவிசெய்தார். சிறுவர்கள் மத்தியில் ஊழியம் செய்வதற்கு கர்த்தர் கொடுத்த திறந்த வாசலுக்காக அவரைத் துதிக்கிறோம். இச்சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவும், கல்விக்காகவும் மற்றும் இவர்களது பெற்றோருக்காகவும் ஜெபிப்போம். 

ஜுலை 15 பணித்தள ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் சுகத்திற்காகவும், விசுவாசிகள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளரவும், ஜெம்ஸ் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர் கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும், வரும் நாட்களில் பணித்தளங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் ஊழியங்கள்.......... தடையின்றி நிறைவேற்றப்படவும் ஜெபிப்போம். 

ஜுலை 16 கடந்த மாதத்தில் இயேசு கிறிஸ்துவைதங்கள் வாழ்க்கையின்  சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள், உடன்படிக்கையின் மூலமாக கிறிஸ்துவின் மீதுள்ள தங்கள் விசுவாசத்தை சபைக்கு வெளிப்படுத்தினர்; தேவனுக்கே மகிமை! ஜெம்ஸ் காப்பகங்களில் தங்கிப் பயிலும் மாணவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்காகவும், பணித்தளங்களில் செயல்பட்டுவரும் சீஷத்துவப் பயிற்சி மையங்களில் பயிற்சிபெறும் சகோதர சகோதரிகளுக்காகவும் 


June 2025

 



☁       மே 1 அன்று தர்பங்கா பணித்தள ஆலயத்தில் நடைபெற்ற ஒரு நாள் கூடுகையில், தர்பங்கா பணித்தளத்தைச் சுற்றியுள்ள 10 பணித்தளங்களைச் சேர்ந்த விசுவாசிகள் கலந்துகொண்டனர். இக்கூடுகையில், சகோதரர் பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் மற்றும் சகோதரர் ஆனந்தன் ஆகியோர் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டனர். சுமார் 200-க்கும் அதிகமான விசுவாசிகள் இக்கூடுகையில் பங்குபெற்று தேவ ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.

பாட்னாவின் பர்ஷா பணித்தளத்தில் மே 11 அன்று நடைபெற்ற தையற் பயிற்சி மையத்தின் (SETUP) 13 வது அணி மாணவர்களுக்கான ஒரு வருட பயிற்சி நிறைவு சான்றளிப்பு நிகழ்ச்சியில், 15 மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன் தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன. தேவனுக்கே மகிமை! தொடர்ந்து ஜுலை 1-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் புதிய அணிக்காகவும் மற்றும் அதில் இணையவிருக்கும் மாணவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மே 14,15,16 ஆகிய மூன்று நாட்கள் கோஹியா, தர்பங்கா மற்றும் பௌவாரி ஆகிய கிராமங்களில் விடுமுறை வேதாகமப் பள்ளி ஊழியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார். இதன் மூலமாக, 235 சிறுவர் சிறுமியருக்கு பாடல்கள் மற்றும் வேதாகமச் சம்பவங்கள் வாயிலாக கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கவும் மற்றும் அவர்களை ஆவிக்குரிய வாழ்க்கையில் உற்சாகப்படுத்தவும் வழிநடத்தவும் கர்த்தர் கிருபை செய்தார். விடுமுறை வேதாகம பள்ளி ஊழியங்களில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

கர்த்தருடைய பெரிதான கிருபையினால், மே 8,10,12 ஆகிய மூன்று நாட்கள், வடக்கு மண்டலத்தில் மூன்று திருமணங்களை கிறிஸ்தவ முறைப்படி நடத்திமுடிக்க தேவன் கிருபை செய்தார்.

விசுவாசப்     பிள்ளைகளுக்கு    ..கிறிஸ்தவ முறைப்படி திருமணங்கள் நடத்தப்படவும், சரியான வாழ்க்கைத்  துணை கிடைக்க தேவன் கிருபை செய்யவும் ஜெபிப்போம்.

MAY 2025

   வடக்கு மண்டலம்


•  மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற ........விடுமுறை வேதாகமப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சியினை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஜெம்ஸ் சிறுவர் ஊழியத்தின் ஊழியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்கும் வழிமுறையினை பல்வேறு விதங்களில் எடுத்துக்கூறினர். 

சிசோ பணித்தளத்தில் ஏப்ரல் 9 அன்று நடைபெற்ற சிறப்புக் கூடுகையில் 250 பேர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோ. பெஞ்சமின் பிராங்ளின் நார்டன் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டார்.

கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் கல்வி ஊழியத்துடன், 87 சிறுபிள்ளைகளுக்கு கிறிஸ்துவின் அன்பினையும் அறிவிக்கவும் மற்றும் ஞாயிறுப் பள்ளியில் கலந்துகொள்ளும் பிள்ளைகளுக்கு தேர்வு நடத்தப்பட்டு பரிசுகளை வழங்கவும், இப்பணித்தளங்களில் கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாகக் காண்பிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார். 

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஞாயிறு ஆராதனையினைத் தொடர்ந்து, சகர்ஷா பணித்தளத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துவின் அன்பினை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். 

வடக்கு மண்டலத்தின் பல்வேறு பணித்தளங்களில், சிறுவர் ஊழியத்திற்கான வாசல்களை தேவன் திறந்துள்ளார்; தேவனுக்கே மகிமை! இச்சிறுவர் ஊழியர்களின் மூலமாக அவர்களது குடும்பங்களும் கிறிஸ்துவை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.

பணித்தளங்களில் வரும் நாட்களில் நடைபெற- விருக்கும் விடுமுறை வேதாகமப் பள்ளி  ஊழியங்களில் பிள்ளைகள் ஆர்வமுடன் கலந்துகொள்ளவும் மற்றும் எவ்வித இடையூறுமின்றி ஊழியங்கள் நடைபெறவும், இயேசு கிறிஸ்துவை அறியாத சிறுவர் சிறுமியர்கள் இவ்வூழியத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பினை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். 


April 2025

 வடக்கு மண்டலம்


• சமஸ்திபூர் பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் சிறுவர் கூடுகையில் 45 சிறுவர் பங்கேற்றனர். ஊழியர்கள் சகோ. ஸ்டீபன் மற்றும் சகோ. இனிகோ ஆகியோர் வேதவசனங்களின் அடிப்படையில் சிறுவர்களுக்கேற்ற செய்திகளைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை ஜெபத்தில் வழிநடத்தினர்.

• மார்ச் 8 அன்று பாபுபர்ஹி பணித்தளத்தில் நடைபெற்ற ஆலய அர்ப்பணிப்பினை கர்த்தர் ஆசீர்வதித்தார். ஊழியர்கள் மற்றும் பணித்தள விசுவாசிகள் இணைந்து தேவனை ஆராதிக்க, சகோ. குணசேகரன் ஜெபத்துடன் ஆலயத்தினைத் திறந்துவைத்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையிலும் கர்த்தருடைய வார்த்தையினைப் பகிர்ந்துகொண்டு விசுவாசிகளை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து, ஜஞ்ஜர்பூர் பணித்தளத்தில் கட்டப்பட்ட ஊழியர் இல்லமும் மார்ச் 9 அன்று ஜெபத்துடன் அர்ப்பணிக்கப்பட்டது; தேவனுக்கே மகிமை!

• மார்ச் 12 அன்று பாட்னா மாவட்டத்தின் அட்மல்கோலா பணித்தளத்தில் கட்டப்பட்ட ஆலயத்தினை, சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் ஜெபத்துடன் அர்ப்பணித்து, தொடர்ந்து நடைபெற்ற ஆராதனையிலும் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

• மதுபனி பணித்தளத்தில் நடைபெற்ற ஒருநாள் பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சகோதரி சஜிலா நார்ட்டன் மற்றும் சகோதரி செல்வி ஆனந்தன் ஆகியோர் தேவ செய்தியளித்து, கூடிவந்தோரை ஜெபத்தில் வழிநடத்தினர். இக்கூடுகையில், 153 பெண்கள் பங்கேற்றனர்.

• கோர்ஹியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் விரைவில் ஆலயக் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவும், தடைகள் நீங்கவும் ஜெபிப்போம். 

March 2025

வடக்கு மண்டலம்

 


  • உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பரிதாபாத்-ல் நான்கு நாட்கள் நடைபெற்ற ஜெம்ஸ் வடக்கு மண்டல தலைவர்களுக்கான குடும்பக் கூடுகையினை கர்த்தர் ஆசீர்வதித்தார். பணித்தள ஊழியங்களுக்காக பாரத்துடன் ஜெபிக்கவும், ஊழியங்களுக்கடுத்த தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளவும், தேவனுடைய பாதத்தில் காத்திருக்கவும், தேவனுடைய வார்த்தைகளைத் தியானிக்கவும் கிடைத்த தருணங்களுக்காக ஆண்டவருக்கு நன்றிசெலுத்துகின்றோம். 
  • பிப்ரவரி 12 அன்று, தர்பங்கா பணித்தளத்தில் நடைபெற்ற மைதிலி-1 கோட்டத்தின் சபை மூப்பர்களுக்கான கூடுகையில் 60 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் கலந்துகொண்டு, தேவ வார்த்தையின் மூலமாகவும் மற்றும் பல்வேறு ஆலோசனைகளின் வாயிலாகவும் சபை மூப்பர்களை உற்சாகப்படுத்தி, ஜெபத்தில் வழிநடத்தினார். 
  • அட்மல்கோலா மற்றும் பாபுபர்ஹி ஆகிய பணித்தளங்களில் கட்டப்பட்டுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகள் இறுதி நிலையினை எட்ட கிருபைசெய்த தேவனுக்கு ஸ்தோத்திரம். இவ்வாலயத்தின் மீதமுள்ள பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவில் நிறைவடையவும், ஜனங்கள் உற்சாகமுடன் தேவனை ஆராதிக்க வழிதிறக்கவும் ஜெபிப்போம். 
  • பணித்தள ஊழியங்களுக்காகவும், அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் மற்றும் பணித்தளங்களில் உண்டாகும் தடைகள் நீங்கவும், ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், விசுவாசிகளது பிள்ளைகளின் மேற்படிப்பிற்காகவும் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவரும் இளைஞர் சேகர் விஷ்ணு பாஸ்வான் விரைவில் குணமடையவும் ஜெபிப்போம். 

FEBRUARY 2025

வடக்கு மண்டலச் செய்திகள் 




  • ஜனவரி 17 அன்று புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் தொலை தூர மருத்துவ மையம் (Tele Medicine Unit - TMU) தொடங்க கர்த்தர் கிருபை செய்தார். இம்மையத்தின் வாயிலாக, மருத்துவப் பணியோடு 
  • சுவிசேஷமும் இப்பணித்தளத்தில் பரவும்படியான வாசலை தேவன் திறந்துள்ளார். அத்துடன், புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் ஜனவரி 17 அன்று நடைபெற்ற வாலிபருக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிகளில் 
  • சகோ. ராகேஷ் குமார் மற்றும் Dr. ரீனா கோபோர்த் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். 
  • கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு ஞாயிறு ஆராதனையில் 850 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இந்த ஆராதனையில் கலந்துகொண்ட கிறிஸ்துவை அறிந்திராத அநேகருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 
  • பாட்னா, ஜெம்ஸ் செயல் மையத்தில் ஜனவரி 18 அன்று நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில், 120 பெண்கள் பங்கேற்றனர்; சகோதரி சஜிலா நார்டன் மற்றும் சகோதரி சிஜி ஷாஜன் ஆகியோர் தேவ வசனங்களின் மூலம் விசுவாசிகளை உற்சாகப்படுத்தி ஜெபத்தில் வழிநடத்தினர்.
  • ஐந்து வருடமாக பிசாசின் பிடியினால் கஷ்டப்பட்ட சகோதரி சங்கீதா குமாரி, ஜெபத்தின் பலனால் பூரண குணமடைந்தார்; தேவனுக்கே மகிமை!  
  • கடந்த மாதத்தில், வடபீஹார் பணித்தளங்களில் வாழும் கிறிஸ்துவை அறியாத சுமார் 25000 பேருக்கு நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். 
  • பாபுபர்ஹி மற்றும் அட்மல்கோலா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சகர்ஷா மற்றும் ஜஞ்சர்பூர் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் குளிர் காலங்களில் ..ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.