Jan 2026

 



ஜனவரி -  13 
ஷாவக்பூர் பணித்தளத்தில் ஒருநாள் சிறப்புக் கூடுகை நடைபெற்றது; விசுவாசிகள் விசுவாசத்தில் வளரவும், தங்கள் ஜெப வாழ்க்கையில் முன்னேறவும் மற்றும் வசனத்தை அறிந்துகொள்ளவும் இக்கூடுகை வழிவகுத்தது. சென்னையைச் சேர்ந்த சகோ. ரூபன் இக்கூடுகையில் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டு, விசுவாசிகளை ஜெபத்தில் வழிநடத்தினார். விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும், ஆத்தும ஆதாயகர்களாக மாறி கர்த்தருடைய மந்தையில் ஆத்துமாக்களை சேர்க்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  14 மைதிலி  1 கோட்டத்தின் தர்பங்கா மற்றும் சிசோ ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் 150 பேர் பங்கேற்றனர். இக்கூடுகையில், ஜெம்ஸ் பெண்கள் முன்னேற்ற ஊழியக் குழுவினர் கலந்துகொண்டு தேவ செய்தியுடன், பெண்களின் வாழ்க்கைக்கான சிறப்பு ஆலோசனைகளையும் வேத வசனங்களின் அடிப்படையில் அளித்து அவர்களுக்காக ஜெபித்தனர். கலந்துகொண்ட ஒவ்வொரு பெண்களுக்கும் இக்கூடுகை ஆசீர்வாதமாக அமைந்தது. பணித்தளப் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையின் மத்தியிலும் தேவனை பிறருக்கு அறிவிக்கவும், தங்கள் குடும்பங்களில் எரியும் தீபங்களாக விளங்கவும் ஜெபிப்போம். 

ஜனவரி - 15 டிசம்பர் 12, 2025 அன்று ராம்பூர் மற்றும் பாட்னா பணித்தளங்களில் நடைபெற்ற பெண்கள் கூடுகையில் பணித்தள விசுவாசிகள் 90 பேர் கலந்துகொண்டனர்; சகோதரி சஜிலா நார்டன் இக்கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்துகொண்டார். குளிர் நாட்களில் பணித்தள விசுவாசிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும், பணித்தளங்களில் காணப்பட்டுவரும் ஊழியத்திற்கு எதிராக விரோதங்கள் மாறவும், எதிர்ப்போர் கர்த்தரைக் கண்டுகொள்ளவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  16 நிர்மாலி மற்றும் மணிகாச்சி ஆகிய பணித்தளங்களில் டிசம்பர் 18 அன்று நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு தின நிகழ்ச்சியில் பணித்தள மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பாடல்கள் மற்றும் குறுநாடகங்களுடன் கிறிஸ்து பிறப்பின் காரணத்தை எடுத்துக்கூறி, சுவிசேஷத்தையும் அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். இப்பணித்தளங்களில் வரும் நாட்களில் தொடர்ந்து செய்யப்படவிருக்கும் ஊழியங்களுக்காகவும் மற்றும் ஆத்தும அறுவடை இப்பகுதியில் பெருகவும் ஜெபிப்போம். 

ஜனவரி -  17 கோரியா மற்றும் தர்பங்கா பணித்தளங்களில் டிசம்பர் 21 அன்று ஞாயிறு பள்ளி பிள்ளைகள் மூலம் நடைபெற்ற கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகள் வாயிலாக, பங்கேற்ற பணித்தள மக்கள் பலருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்க கர்த்தர் உதவிசெய்தார். இந்நிகழ்ச்சியில், 260 ஞாயிறு பள்ளி சிறுவர் சிறுமியரும் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்துகொண்டனர். பணித்தளங்களில் நடைபெற்றுவரும் சிறுவர் ஊழியங்களுக்காகவும், அவர்கள் மூலமாக சமுதாயமும் குடும்பங்களும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.