Promotional Centers & Contacts

FEBRUARY 2025

வடக்கு மண்டலச் செய்திகள் 




  • ஜனவரி 17 அன்று புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் தொலை தூர மருத்துவ மையம் (Tele Medicine Unit - TMU) தொடங்க கர்த்தர் கிருபை செய்தார். இம்மையத்தின் வாயிலாக, மருத்துவப் பணியோடு 
  • சுவிசேஷமும் இப்பணித்தளத்தில் பரவும்படியான வாசலை தேவன் திறந்துள்ளார். அத்துடன், புல்வாரி ஷெரீப் பணித்தளத்தில் ஜனவரி 17 அன்று நடைபெற்ற வாலிபருக்கான ஒருநாள் சிறப்புக் கூடுகையில் 180 வாலிப சகோதர சகோதரிகள் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சிகளில் 
  • சகோ. ராகேஷ் குமார் மற்றும் Dr. ரீனா கோபோர்த் ஆகியோர் கர்த்தருடைய வார்த்தையைப் பகிர்ந்துகொண்டனர். 
  • கோரியா, தர்பங்கா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்ற சிறப்பு ஞாயிறு ஆராதனையில் 850 பேர் பங்கேற்றனர். சகோ. பெஞ்சமின் பிராங்கிளின் நார்டன் தேவ செய்தியினைப் பகிர்ந்துகொண்டு ஜனங்களை ஜெபத்தில் வழிநடத்தினார். இந்த ஆராதனையில் கலந்துகொண்ட கிறிஸ்துவை அறிந்திராத அநேகருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 
  • பாட்னா, ஜெம்ஸ் செயல் மையத்தில் ஜனவரி 18 அன்று நடைபெற்ற பெண்களுக்கான கூடுகையில், 120 பெண்கள் பங்கேற்றனர்; சகோதரி சஜிலா நார்டன் மற்றும் சகோதரி சிஜி ஷாஜன் ஆகியோர் தேவ வசனங்களின் மூலம் விசுவாசிகளை உற்சாகப்படுத்தி ஜெபத்தில் வழிநடத்தினர்.
  • ஐந்து வருடமாக பிசாசின் பிடியினால் கஷ்டப்பட்ட சகோதரி சங்கீதா குமாரி, ஜெபத்தின் பலனால் பூரண குணமடைந்தார்; தேவனுக்கே மகிமை!  
  • கடந்த மாதத்தில், வடபீஹார் பணித்தளங்களில் வாழும் கிறிஸ்துவை அறியாத சுமார் 25000 பேருக்கு நற்செய்தியை அறிவிக்க கர்த்தர் கிருபை செய்தார். 
  • பாபுபர்ஹி மற்றும் அட்மல்கோலா ஆகிய பணித்தளங்களில் நடைபெற்றுவரும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காகவும், சகர்ஷா மற்றும் ஜஞ்சர்பூர் பணித்தளங்களில் நடைபெறும் ஊழியர் இல்லக் கட்டுமானப் பணிகளுக்காகவும் மற்றும் குளிர் காலங்களில் ..ஊழியர்களின் பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.